Description
ஏவுகணை மனிதர்
அப்துல் கலாம்.
இந்திய பாதுகாப்பு அறிவியலின் அடையாளப் பெயர். இந்திய ஏவுகணைத் திட்டத்தின் தந்தை.
இளைஞர்களின் கனவு நாயகராக மாறிவிட்டவர்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.
இந்தியா தனக்கென்று செயற்கைக் கோள் ஏவுகலங்களையும், ஏவுகணைகளையும் உற்பத்தி செய்து, பாதுகாப்பு துறையில் சுயசார்பு அடைவதற்கு காரணமானவர்.
எஸ்.எல்.வி.3 செயற்கைக் கோள் ஏவுகலத்தை முதன்முதலாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை நிகழ்த்தினார். பின்னர் ஒருங்கிணைந்த ஏவுகணைத் திட்டத்தை வழிநடத்தி, பிருத்வி, அக்னி என்று பல்வேறு ஏவுகணைகளை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார்.
இதன்மூலம், பாகிஸ்தானையும், சீனாவையும் இந்திய ஏவுகணை வளையத்திற்குள் கொண்டுவந்தார்.
60-களிலும் 70-களிலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் முக்கியமான நபராக இருந்தார். 80-களின் இறுதியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வுக் கூடத்தில் ஏவுகணைகளோடு வாழ்க்கை நடத்தினார்.
90-களில் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்தின் தூண்டு கோலாக மாறினார். பாரத ரத்னா விருது பெற்றார்.
நாம் காணும் கனவு நிச்சயமாக நனவாகும் என்பதற்கு கலாம் வாழ்கின்ற உதாரணமாகி விட்டார்.
சிறுவயதில் இவருடைய தந்தை, இவர் கலெக்டராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், இவர் பறவையைப் போல பறக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால், அக்கினிச் சிறகுகளுடன் ஏவுகணைப் பறவைகளைப் படைத்தார். இந்தியாவின் உச்சபட்ச பதவியான குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.
இவருடைய வாழ்க்கைக் கதையை எளிமையாக தரவேண்டும் என்ற நக்கீரன் ஆசிரியர், அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களின் விருப்பத்தின்படி இந்த நூலை தயாரித்துள்ளேன்.
அன்புடன்
ஆதனூர் சோழன்





சமீபத்தில் வெளியான ’மொத ராத்திரி’ படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கடந்த 6ஆம் தேதி காணாமல்
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் செப்டம்பர் 17-ஆம் தேதி திராவிடர்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பிலிப்ஸ் காலனியை சேர்ந்தவர் 59 வயதான ஜூலியட் லதா. இவர் தனியார்
வடலூர் நகராட்சிப் பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக டூவீலர் ஸ்டாண்ட் நடத்தப்பட்டு வருவதாக
Reviews
There are no reviews yet.